திருப்பூர், ஜூலை 9 - திருப்பூர் அரிசி கடை வீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் விற்பனை செய்த 7 கடைகளுக்கு செவ்வா யன்று ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது அதி காரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அந்தக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், திருப் பூர் அரிசி கடை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் மாநகர நல அதிகாரி கௌரி சரவ ணன் மற்றும் உதவி ஆணையர் வினோத், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சின்னத்துரை, தங்க முத்து, ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரிசி கடை வீதியில் உள்ள கடைவீதிகளில் சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது 7 கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டது. மேலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப் படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.