districts

ரூ.49 லட்சம் பறிமுதல்

சேலம், மே 18- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று அதிகாலை செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவில் அருகே பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,அவ்வழியாக வந்த காரைநிறுத்தி சோதனையிட்டனர். அதில் அட்டைப் பெட்டிக்குள் துணிகளுக்குஅடியில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.இதையடுத்து அந்த பணத்தை கைப்பற்றி, காரை ஓட்டி வந்த மகேந்திரகுமாரிடம் விசாரணை நடத்தினர். அதில் தாம்செய்து வரும் டீத்தூள்மொத்த வியாபாரத்திற் காக பொருள் வாங்குவதற்காகவே பணத்தை கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். ஆனாலும் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 49 லட்சம் ரூபாய் பணத்தை கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத் தனர்.

;