districts

img

காதலிக்கும் வாலிபர்களை தாக்கும் ரவுடி கும்பல் வீடியோ வெளியானதால் பரபரப்பு

கோவை, ஜூன் 24- கோவை சிங்காநல்லூர் அருகே  கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில்  கைது செய்யப்பட்ட இளைஞர் தன் னுடன் பயின்ற மாணவர்களை தாக் கும் போன்றும் கையில் பட்ட கத்தியு டன் சுற்றுவது போன்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை உப்பிலிபாளையம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி லாவண்யா என் பவர் கடந்த 13ம் தேதி விஷம் குடித்து தற்கொலை  செய்து கொண்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண் டதில், மாணவியின் வீட்டின் அருகில் தங்கி படித்து வந்த கேசவ்குமார் என்ற மானாமதுரையை சேர்ந்த மாணவர், கல்லூரி மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

மேலும் மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவ தாக கூறி மிரட்டியதால் அச்சம டைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரணை யில் தெரியவந்தது. இதுதொடர் பாக வழக்குப்பதிவு செய்த சிங்கா நல்லூர் காவல்துறையினர் மானா மதுரையில் வீட்டில் இருந்த கேசவ குமாரையும் அவரது தாயார் மங்கை யர்கரசியும் கைது செய்தனர். பணம் பறிக்கும் கேசவ்குமாரின் நடவடிக் கைகள் தெரிந்தும், அவற்றுக்கு உடந்தையாக இருந்ததால் மங்கை யர்கரசியையும்  சிங்காநல்லூர் காவல் துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப் பட்ட கேசவ்குமாரின் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்த்த சிங்காநல்லூர் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் அறை எடுத்து தங்கி படிக்கும் கல் லூரி மாணவர்களை கொடூரமாக தாக்கி அவர்களிடம் பணம் பறிப்ப தும், ஜூனியர்  மாணவர்களை ரோட் டில் அடிப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் கையில் கத்தியுடன் வீடியோக்கள் பல எடுத்து வைத்திருப்பதும் தெரி யவந்தது. தற்போது இந்த காட்சி கள் வெளிவந்துள்ளது. இந்த காட்சி கள் தொடர்பாகவும் சிங்காநல்லூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜூனியர் மாணவர் களை அவர்களின் அறைக்கு சென்று மிரட்டி தாக்குவதும், அவர்களிடம் ஜூனியர் மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் வாடிக் கையாக வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக சிங் காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேசவ்குமாரால் வேறு கல்லூரி மாணவிகள், மாணவர்கள் பாதிக் கப்பட்டு இருந்தால் அது தொடர்பா கவும் விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் திட்டமிட்டு இருக்கின்றனர். மானாமதுரை சேர்ந்த கேசவ்குமார் கல்லூரியில் மோசமாக நடந்து கொண்டதன் கார ணமாக நவ இந்தியா அருகே உள்ள தனியார் கல்லூரியில் இருந்து நீக் கப்பட்டார். இருந்தாலும் கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்து  இருந்திருப்பதும், இந்த செயல்க ளுக்கு அவரது தாயாரும் உடந்தை யாக இருப்பதும் தெரிய வந்துள் ளது. தற்போது அம்மாவும், மகனும்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்  சிங்காநல்லூர் போலீ சார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

;