districts

சாலையோர வியாபாரி தற்கொலை முயற்சி

திருப்பூர், மார்ச் 28- பேருந்து நிலையம் வெளியே சாலையோர கடை அமைக்க அனுமதிக்கவில்லை என கூறி இளைஞர் ஒருவர்  சாலை நடுவே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையம் வெளியே தஞ்சா வூரைச் சேர்ந்த கணபதி என்பவர் சாலையோர கடை  அமைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில்,  மாநகராட்சி அதிகாரிகள் தனது கடையை அகற்ற சொல்வ தாகவும், மற்ற அனைவரும் கடை அமைத்திருக்கும் நிலை யில், தன்னை மட்டும் கடை அமைக்கக் கூடாது என சொல்வ தாக கூறி வியாழனன்று கணபதி பேருந்து நிலையம் வெளியே, தள்ளு வண்டியை சாலையில் நிறுத்திவிட்டு, கத்தி யால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கணபதியை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.

;