districts

img

கடை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கிடுக சாலையோர சிறு வியாபாரிகள் கோரிக்கை

தருமபுரி, டிச.9- தருமபுரி சந்தைபேட்டை சாலையோர பழக்கடை வைத்துக் கொள்ள அனுமதித்திட சிறு வியபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைபேட்டை சாலை யோரம் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக சிறுகடைகள் வைத்து வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தருமபுரி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் சாலையோர சிறுகடை வியாபாரிகளுக்கான  அடையாள அட்டையும் வழங்கியுள்ளது. மேலும் இந்த  வியாபாரிகளிடமிருந்து நகராட்சிக்கு நாள் ‌ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கேட் வசூல் செய்யப்படுகிறது.  இந்நிலையில் வியாழனன்று நகராட்சி நிர்வாகம், காவல் துறையின் துணையுடன் கடைகளை அப்புறப்படுத்தியது. மேலும் இனிமேல் கடை வைக்கக்கூடாது எனவும் தெரி வித்துள்ளது. எனவே தங்களின் வாழ்வாதாரம் கருதி மீண்டும்‌ கடைவைக்க அனுமதி வழங்க வேண்டும் என சாலையோர சிறு வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்தை வலி யுறுத்தியுள்ளனர்.