திருப்பூர், நவ.5- திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதி களில் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்ததால் பாதிப்பு பெரிதாகத் தெரியவில்லை. எனினும் தாழ்வான பகுதிகள் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனியன்று மதியம் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அனுப்பர்பாளையம், வேலம் பாளையம், சந்திராபுரம், ராக்கியா பாளையம், அவிநாசி சாலை, பெருமா நல்லூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியு டன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. முறையான வடி கால் வசதி இல்லாத பகுதிகளில் சாலை களில் தண்ணீர் பெருமளவு தேங்கி நின்றது. குறிப்பாக, அனுப்பர்பாளை யத்தில் இருந்து வேலம்பாளையம் செல்லும் சாலையில் மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கிநின்றது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த இருசக்கர வாகனங்கள் அந்த தண்ணீரில் மூழ்கின. அத்துடன் தாழ் வான இடங்களில் இருந்த வணிக நிறு வனங்களுக்கு உள்ளும் மழைநீர் புகுந் ததால் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளா னார்கள்.