கோவை, ஜூலை 20- உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86 ஆவது வார்டுக் குட்பட்ட கோட்டை புத்தூர், ஜமீன்தார் நகர், வைரம் நகர், வீரபாண்டி நகர், கல்லுக்குழி, சன் கார்டன், என்.எஸ் கார்டன், ரோஜா கார்டன் ஆகிய பகுதிகளில் சாலை வசதி கள் இல்லாமலும், மழைநீர் வடிகால் இல்லை, பாதாள சாக்கடை திட்டங்கள் என பல அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ள னர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பய னில்லாத திட்டங்களை செய்யும் கோவை மாநக ராட்சி, சாலை வசதி, மழை நீர் வடிகால், பாதாள சாக் கடை போன்ற பணிகளை செய்து தராமல் உள்ளது. இந்நிலையில், 86 ஆவது வார்டு பகுதிகளில் அடிப் படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி சனியன்று அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடு பட்டனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி பொது மக்களில் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.