districts

img

காய்கறி மூட்டைகளின் எடையை 50 கிலோவாக குறைத்திடுக

உதகை, அக்.17- நீலகிரி மாவட்டத்தில் காய்கறி மூட்டை களின் எடையை 50 கிலோவாக குறைக்க வேண்டும் என சிஐடியு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐ டியு) நீலகிரி மாவட்ட 10 ஆவது மாநாடு கூட லூர் அருகே உள்ள தேவர்சோலையில் மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.  இம்மாநாட்டில், டான்டீ தொழிலாளர்க ளுக்கு அரசு அறிவித்த சம்பளம் ரூ.425.40யை உடனடியாக வழங்க வேண்டும். ஆஷா  பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ.21 ஆயி ரம் வழங்க வேண்டும். தாய்சோலை தோட் டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 8  வருட மாக வழங்காமலுள்ள ஓய்வூதியத்தை உடன டியாக வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண் டர்களை இலவசமாக வழங்க வேண்டும். உலக சுகாதார மையத்தின் பரிந்துரையை பின்பற்றி, நீலகிரியில் காய்கறி மூட்டை களின் எடையை 50 கிலோவாக குறைக்க வேண்டும். உதகையிலுள்ள டாஸ்மாக் கிடங்கை புனரமைத்து, ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண் டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின்  கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர்களை  பாதுகாக்கும் வகை யில், வனவிலங்கு பிரச்சனைகளுக்கு தீர்வு  காண வேண்டும், மேலும், வனவிலங்குகளி னால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலையும், ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சிஐடியு நீலகிரி  மாவட்ட தலைவராக எல்.சங்கரலிங்கம், செய லாளராக சி.வினோத், பொருளாளராக நவீன் சந்திரன் மற்றும் மாவட்ட  நிர்வாகிகள் 10  பேர், 26 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு  செய்யப்பட்டது. முடிவில், மாநாட்டை  நிறைவு செய்து சிஐடியு மாநிலச் செயலாளர் கோபிகுமார் உரையாற்றினார். சிஐடியு  மாவட்ட நிர்வாகி ராஜன் நன்றி கூறினார்.