அவிநாசி, ஜூலை 10- சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன் றிய மோடி அரசை கண்டித்தும், விலை உயர்வை சமாளிக்க முடியாது என்பதை சித்தரிக்கும் வகையில் சிலிண்டருக்கு பாடை கட்டி அவிநாசியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியத்தில் ஆளும் மோடி அரசாங்கம் தொடர்ந்து மக் கள் விரோத கொள்கைகளை அமுல்படுத்தி வருகிறது. இந் நிலையில் திடீரென்று ஒன்றிய அரசு சிலிண்டர் விலையை ஐம்பது ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாதர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய குழு சார்பில் சிலிண்ட ருக்கு பாடை கட்டி ஒப்பாரி பாடல் பாடி நூதன போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில், மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் செல்வி, ஒன்றிய தலைவர் சித்ரா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.