districts

img

தெருநாய்கள் தொல்லை:காங்கேயம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர், அக்.24- தெருநாய்களை கட்டுப்படுத் தாமல், நகராட்சி தலைவர் அலட்சிய மாக இருப்பதாக கூறி புதனன்று பொது மக்கள் காங்கேயம் நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகை யில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நக ராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன.  காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும்   200க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறிநாய் களால் உயிரிழந்துள்ளன. இந்நிலை யில்  நகராட்சிக்கு உட்பட்ட 10ஆவது வார்டு பகுதியில்  தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் விரட்டுகிறது. மேலும், வாகன ஓட்டிகளையும் நாய் துரத்துவதால் விபத்துகள் நடந்த வண் ணம் உள்ளன. இதுகுறித்து பலமுறை காங்கேயம் நகராட்சி தலைவர் சூரிய  பிரகாஷிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தார்.  எனவே தான் அலுவலகத்தை முற்று கையிட்டதாக தெரிவித்தனர். விரைவில் தெரு நாய்களை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ்  உறுதி அளித்தார். இதையடுத்து முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.