districts

img

மண்ணுக்கேற்ற புதிய ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள்

கோவை, செப்.26- தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் மாநில அளவி லான உழவர் தின துவக்க விழா வில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முத்துசாமி, சாமி நாதன் ஆகியோர் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டனர். கோவையில் உள்ள தமிழ்நாடு  வேளாண்மை பல்கலைக்கழகத் தில் மாநில அளவிலான உழவர் தின  விழா வியாழனன்று (செப்.26) துவங்கியுள்ளது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற் றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை  அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற னர். இதனை தொடர்ந்து, செய்தியா ளர்களை சந்தித்த அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறுகை யில், விவசாயம் செய்ய விவசாய  ஆட்கள் குறைந்து கொண்டு வருகிற சூழலில், மூன்றாண்டுக ளில் வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது. கண்காட்சியில் விவசாயம் சார்ந்த  ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள் ளும் கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழ கம் சார்பில் அதிக விளைச்சல் தரக் கூடிய புதிய பயிர் வகைகளும் நவீன  தொழில் நுட்பங்களும் ஆண்டு தோறும் பொங்கல் தினத்தன்று வெளியிடப்படுவதாகவும், மண் ணுக்கேற்ற புதிய ரகங்கள் குறித்த  ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. 24 வகையான புதிய பயிர்கள் ரகங்கள் வேளாண்  பல்கலைக் கழக கிழக்குப் பண்ணை வளாகத்தில் பயிரிடப் பட்டு இருக்கின்றன. இதில், உள்ள  பயிர்கள் கடும் வறட்சியை தாங்க  கூடியதாக இருக்கின்றன. ஆடிப் பட்டம் தேடிப் பார்த்து விதைக்கும்  நிலை மாறி, பருவம் தவறி பொழி யும் மழையால், கடும் வறட்சி  போன்ற வானிலை சூழலை சமா ளிக்க வேண்டி இருக்கின்றன. விவ சாயிகள் இது போன்ற சவால்களை சமாளிக்கும் வகையில், கால நிலை மாற்றத்தை சமாளிக்கும் விதைகள் கண்டுபிடிக்கப்பட்டு பயிர்கள் பயிரிடப்பட்டு வளர்க்கப் பட்டு இருக்கின்றன. வறட்சி, மழை  பொழிவு என மாறி வருகின்ற வானிலை சூழலை தாங்கி, விவ சாயிகள் வடிக்கும் கண்ணீரை துடைக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக  கண்டுபிடிப்புகள் அமைந்து இருக் கின்றன. புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட பயிர் ரகங்கள் விரைவில் விவ சாயிகளுக்கு விதைக்க தரவிருப் பதாக வேளாண் துறை ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்து இருக்கின்ற னர். நெருக்கடியில் உள்ள விவசா யிகளுக்கு ஏதுவான புதிய ரகங் கள் கண்டுபிடிக்கப்பட்டு வேளாண்  

பல்கலைக் கழகம் அறிமுகம் செய்து வருவதனை தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் வரவேற் கின்றனர். உழவர்களின் நலன் சார்ந்து வேளாண் துறை கண்டு பிடிப்புக்கு தமிழ்நாடு அரசாங்கம்  உதவியாக இருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்திருக்கின்ற னர். தமிழ்நாடு வேளாண் பல் கலைக் கழகத்தின் இது போன்ற புதிய ரகங்கள் விவசாயிகளுக்கு  பயன் உள்ளதாக அமைந்திருப் பதாக தெரிவித்து இருக்கின்றனர் என்றார்.  இந்நிகழ்வில், மாநில உழவர்  நலத்துறை முதன்மைச் செயலா ளர் செல்வி அபூர்வா, ஹைதரா பாத் வேளாண் தொழில்நுட்ப பயன் பாட்டு ஆராய்ச்சி கழகத்தின் இயக் குனர் முனைவர் ஷேக் நா.மீரா, சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆனந்த், புதுடெல்லி இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ராம் மோகன் ரெட்டி, வேளாண்மை பல் கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி ஆகி யோர் கருத்துரைகள் வழங்கினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு விவ சாயிகளுக்கு வேளாண் செம்மல்  விருதுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டது. இந்த கண்காட்சியில், ஏராள மான விவசாயிகள், வேளாண் கல் லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான உழவர் தின விழா, 29 ஆம் தேதியன்று வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.