districts

img

பூட்டியே கிடக்கும் கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

தருமபுரி, ஜன.28- தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டி முடித்து 2  ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவல கம், வட்ட வழங்கல் அலுவலகம், வட்ட வழங்கல் மற்றும்  தேர்தல் அலுவலகம், அடுத்த கட்டிடத்தில் பத்திரப்பதிவு அலு வலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் இந்த அலுவலகத்திற்கு ரேசன் கார்டு, பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் வசதிக் காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மதிப்பீட் டில் புதிதாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகை யில் கழிவறை கட்டப்பட்டது. கட்டி முடித்து 2 ஆண்டுகளாகி யும் திறக்காத நிலையில் பூட்டியே உள்ளது. இதன்கார ணமாக இங்கு வரும் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திற னாளிகள் என அனைவரும் கடும் அவதியடைந்து வருகின்ற னர். வேறு வழியின்றி கட்டண கழிவறைக்கு செல்ல வேண் டிய நிலை உள்ளது. அதிகாரிகளின் வசதிக்கு சொகுசு கழி வறை இருந்தாலும், பொதுமக்கள் பயன்படுத்த கழிவறை இல்லாமல் இருப்பது ஏனோ அதிகாரிகள் கவனத்திற்கு செல்லவில்லை. எனவே, உடனடியாக கழிவறையை மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.