அவிநாசி,ஆக.12 மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியா ளர் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கோட்ட பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அவிநாசியில், கோட்டத் தலைவர் கருப் பன் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கோட்ட பேரவையில், சாலைப்பணியாளர்க ளின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கால மாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண் டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இந்த பேரவை கூட்டத்தில், உட் கோட்ட தலைவர் ராஜேந்திரன் வரவேற் றார். மாநில துணைத் தலைவர் சிங்கரா யன் துவக்க உரையாற்றினார். இதைய டுத்து கோட்டச் செயலாளர் ராமன் வேலை அறிக்கை முன்வைத்தார். கோட்ட பொருளா ளர் அண்ணாதுரை வரவு செலவு அறிக் கையை முன்வைத்தார். சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி வாழ்த்தி பேசினார். மாநிலத் தலைவர் பாலசுப்பிரம ணியன் சிறப்புரையாற்றினார். இதில் கோட்ட துணைத் தலைவர் சிவகு மாரன், கோட்ட இணைச் செயலாளர் விஸ்வநா தன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்து சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.