districts

img

பாறைக்குவியலை அகற்ற கோரிக்கை

திருப்பூர், டிச.19- ஊத்துக்குளி பரப்புதோட்டம் பகுதியில் போக்குவ ரத்துக்கு இடையூறாக உள்ள பாறைக்குவியல், மண்மே டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி  கோரியுள்ளது. இதுதொடர்பாக ஊத்துக்குளி பேரூராட்சி செயல்  அலுவலருக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஆர்.குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது, ஊத்துக்குளி பேரூராட்சி 2ஆவது வார்டு, விஜயமங்கலம் - திருப்பூர் சாலை, பரப்புதோட் டம் குடியிருப்பு பகுதியில் புதிய கொடிவேரி குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் சமீபத்தில் செய்யப்பட்டது. அப் போது வெட்டி எடுக்கப்பட்ட பாறை கற்கள், மண் குவி யல் அகற்றப்படாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுள் ளனர். இதனால் பொதுமக்கள் குடியிருப்புக்கு நடந்து  சென்று வரவோ, இருசக்கர வாகனத்தை நகர்த்தவோ முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் விரைவாக நடவ டிக்கை எடுத்து பாறை கற்களை அகற்றி, மண் மேடு களை சமன்படுத்தி குடியிருப்புகளுக்கு சிரமமின்றி சென்று வர ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.