தருமபுரி, நவ.15- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியம்பட்டியிருந்து-தாதனூர் செல்லும் சாலை பழுத டைந்துள்ளது. இச்சாலையை சீரமைக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியம்பட்டியி லிருந்து தாதனூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதிலும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின் றனர். பழுதடைந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். ஆகவே, சாலையை சீரமைக்கக் கோரி, அதிகாரி களிடம் மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவ டிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த ராமியம்பட்டி-தாதனூர் செல்லும் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.