districts

img

பல்லடம் அரசு கல்லூரியில் பற்றாக்குறை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

திருப்பூர், ஜூலை 5- பல்லடம் அரசு கலை கல்லூரியில் பற்றாக்குறையாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை உடனடியாக நிரப்பும் படி இந்திய மாணவர் சங்கம் பல்லடம் ஒன்றிய மாநாடு வலியு றுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் பல்லடம் ஒன்றிய மாநாடு  ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் சங்கத்தின் பல்ல டம் ஒன்றியத் தலைவராக சந்துரு, செயலாளராக கிருஷ்ணகுமார், துணை தலைவர்களாக விமல், மோகன் ராஜ், துணை செயலாளர்களாக சபரி, மோகன் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர். 13 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு  செய்யப்பட்டது.  இம்மாநாட்டில் பல்லடம் அரசு கல்லூரியில் பற்றாக்குறை யாக உள்ள பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண் டும், பல்லடம் சுற்று வட்டார பகுதியில் அரசு பேருந்து வசதி  இல்லாத கிராமங்களில் மாணவர் நலனை கருத்தில் கொண்டு  குறைந்தபட்சம் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் பேருந்துகளை இயக்கிட வேண்டும். கல்விநிலைய வளாகங் களில் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தைவிட அதிகபட்ச கட்டண  கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன.