districts

img

உரிமம் காலாவதியான பிறகும் இயங்கும் டாஸ்மாக் பாரை மூட கோரிக்கை

திருப்பூர், பிப்.12- ரங்கநாதபுரம் பகுதியில் செயல் பட்டு வரும் டாஸ்மாக் பாரின் உரிமம்  காலாவதியாகிய பிறகும் இயங்கி வரு வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அப்பகுதி மக்கள் திங்களன்று புகார்  மனு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திங்களன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகர கொங்கு பிரதானச் சாலை இஎஸ்ஐ மருத்துவமனை அரு கில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை  மூடக்கோரி நீண்ட காலமாக போராடி வருகிறோம். கடந்த மாதம் 23  ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை நேரில்  சந்தித்து மனு அளித்த பின், டாஸ்மாக்  நிர்வாகதால் இரண்டு மாத காலத்திற் குள் கடை இடமாற்றம் செய்யப்படும் என்று கடை முன்பு சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்த அறி விப்பு பலகையை அடுத்த நாளே பார் உரிமையாளர் கழட்டி வீசிவிட்டார். அறி விப்பு பலகையை மீண்டும் வைத்திட  கோரி டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம்  சொல்லியும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும், இந்த டாஸ்மாக கடை யில் உள்ள பாரின் உரிமம் கடந்த மாதமே  காலாவதியானதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் உரிமம் இல்லாத நிலையிலயே டாஸ்மாக் கடையில் தொடர்ந்து பார் இயங்கி வருகிறது. உரி மம் இல்லாமல் நடத்தி வரும் பார் உரி மையாளர்கள் மீது இதுவரை எத்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே உடனடியாக தலையிட்டு உரிமம் இல் லாமல் சட்டவிரோதமாக இயங்கி வரும்  பாரை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம்  பொதுமக்களிடம் அளித்த வாக்குறுதி யின் படி இரண்டு மாத காலத்திற்குள் கடை இடமாற்றம் செய்யப்படும் என்ற  அறிவிப்பு பலகையை தேதி உள்ளிட்ட விபரங்களுடன் மீண்டும் வைத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது.