திருவள்ளூர், டிச 31- நான்கு மாதமாக வழங்கப்படாத உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் புதனன்று (டிச-29) பொன்னேரியில் நடைபெற்ற முகாமில் மனு அளித்தனர். பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய பகுதி களில் வாழும் மாற்றுத்திறனாளிகள் 39 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 4 ஆண்டு களாக வலியுறுத்தி வருகின்றனர். மனு கொடுக்கும் போதெல்லாம் முயற்சி செய்கிறோம் என்று சொல்லி அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் டிசம்பர்-29 அன்று மனு அளித்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக உதவித் தொகை வழங்காமல் உள்ளது இதனால் மாற்றுத்திறனாளிகள் அன்றாட செல வினங்களுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும், மாற்றுத்திற னாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாம் மாதாமாதம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். கோட்டாட்சியர் வளாகத்தில் நடை பெற்ற சிறப்பு முகாமில்மா ற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் பாபு, மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.