உடுமலை, பிப்.21- அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணையாக இருக்கும் பொன்னி காட்டுத்துறை தடுப்பணையை மேம் படுத்தப்பட்ட சுற்றுலாத் தளமாக அறி விக்க வேண்டும் என சுற்றலாப் பயணி கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலூகா எல்லை பகுதியான பெருமாள்புதூர் கிராமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமரா வதி ஆற்றின் குறுக்கே விவசாய பயன்பாட்டிற்கு என்று கட்டப்பட்ட தடுப்பணையின் மூலம் ஆற்றின் இரு கரைகளிலும் இருக்கும் ஆயிரக்க ணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், அருகில் உள்ள கிராமங்களின் நிலத் தடி நீர் மட்டம் உயரவும், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கரைகளின் இரு புறங்களிலும் பனை மரம் மற்றும் நாட்டு மரங்கள் உள்ள தால் இந்த தடுப்பணை ஒரு சிறிய அணை போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. இதேபோல் திருமூர்த்திமலை யில் பஞ்சலிங்க அருவி அமைத் துள்ள இடத்தில் செயற்கையாக ஒரு அருவியை ஏற்படுத்தியதால் அப்ப குதி சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தரும் இடமாக மாறியது. இந்த பொன்னிகாட்டுதுறை தடுப் பணை பகுதியில் படகு சவாரி மற்றும் சிறிய பூங்கா அமைத்தால் மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாக மாறும். இதுகுறித்து அருகில் உள்ள கிராம மக்கள் தெரிவிக்கையில், அம ராவதி ஆற்றின் முதல் தடுப்பணை பொன்னிகாட்டுத்துறையில் அமைந் துள்ளது. இந்த அணையில் பல திரைப்ப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. மேலும் இப்ப குதியின் வழியாகத் தான் கேரள மாநி லத்தில் இருந்து பழனி, ஆனைமலை, திருமூர்த்தி அணைகளுக்கு செல்ப வர்கள் செல்வதால் இந்த தடுப்ப ணையை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தளமாக அறிவித்து அடிப்படை வசதி களை செய்து தந்தால் இப்பகுதி மக்க ளின் வாழ்வாதாரம் மேம்படும் என்ற னர்.