districts

img

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர் நியமிக்க கோரிக்கை

திருப்பூர், ஆக.4- திருப்பூர் மாநகராட்சி, 1 ஆவது வார்டில் 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந் தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நோயா ளிகள் வலியுறுத்தி உள்ள னர். திருப்பூர் மாநகராட்சி, 1 ஆவது வார்டுக் குட்பட்ட தந்தை பெரியார் காலணியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரு கிறது. இப்பகுதில் 500க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளதால் இரண்டு மாதங்க ளுக்கு முன்பு இந்த ஆரம்ப சுகாதார நிலை யம் 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதத்திற்கு 10 முதல் 20 பிரசவம் வரை நடைபெறுகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு என்று நிரந்தர மாக ஒரு மருத்துவர் இல்லாததால் பல சம யங்களில் செவிலியர்களே பிரசவம் பார்க்க நேர்கிறது. மேலும் மருத்துவர்களும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே  வந்து செல்கின்றனர். இதனால் ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் மிக வும் சிரமத்துக்குள்ளாகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு என்று நிரந்தரமாக மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று நோயாளிகள் தெரிவித்தனர்.