districts

img

கொடிக்கம்பம் சேதம்: போலீசில் புகார்

நாமக்கல், பிப்.18- அரசுப்பள்ளி கொடிக்கம் பத்தை சேதப்படுத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியு றுத்தி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பள்ளி  மேலாண்மைக்குழுவினர் புகாரளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், காவேரி ஆர்எஸ் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகி றது. இப்பள்ளியில் சுமார் 125க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று  வருகின்றனர். பள்ளி அரு கிலேயே அங்கன்வாடி, ரேசன் கடை அமைந்துள் ளது. இந்நிலையில், திங்க ளன்று இரவு அரசுப்பள்ளி யின் தேசியக்கொடி கம்பத் தையும், சத்துணவு மையத் தின் கதவையும், அடையா ளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். மாலை, இரவு நேரங்களில் அரசுப் பள்ளி அருகே மது குடித்து விட்டு பாட்டிலை உடைப் பது, தகராறு செய்வது போன்ற சமூக விரோத நட வடிக்கைகள் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. எனவே, பள்ளிபாளையம் போலீசார் இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மைக்குழு சார்பிலும், அரசுப்பள்ளி சார் பிலும் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கினர்.