districts

img

மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாக வீடுகள் அமைச்சர் கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

உதகை, ஜூலை 17- நீலகிரியில் பலத்த மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம்  வீடுகள் கட்டி தரப்படும் என அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன் கூறினார். நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து  வருவதால் பல்வேறு இடங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  இந்த நிலையில் ஊட்டி மற்றும் கூடலூரில் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன், மின்சாரத் துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை  அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட் டோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் முகாமில் தங்கி உள்ள பொது மக்களுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கினர். இதையடுத்து ஊட்டி அரசு விருந் தினர் மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. அப்போது மழை  பாதிப்பு மீட்பு பணிகள் மற்றும் முன் னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு அமைச் சர்கள் அறிவுறுத்தினர்.  இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  செய்தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் முன்னதா கவே எடுத்த காரணத்தினால் நீலகிரி யில் சேதம் குறைவாக உள்ளது.  

உடையும் அபாயம் உள்ள பாலங் களை கண்டறியவும் சிறிய பாலங் களை விரிவுபடுத்தவும் நடவடிக்கை  எடுக்கப்படும். ஆபத்தான நிலையில்  உள்ள 163 மரங்கள் வெட்டபட்டு உள் ளன. அதேபோல் மழையால் விழுந்த 59 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மழையால் ஒரு வீடு முழுவதுமாக இடிந்துள்ளது,  61 வீடு பகுதி அளவு  பாதிக்கப்பட்டு உள்ளது. முழுவதும் இடிந்த வீட்டுக்கு தலா ரூ. 5 ஆயிர மும், பாதி சேதமடைந்த வீட்டுக்கு தலா ரூ 4.100-ம் நிவாரணம் வழங்கப் படும். சேதமடைந்த வீடுகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி தரப்படும். நீலகிரி மாவட்டத்தில் 3329 முதல் நிலை பொறுப்பாளர்கள் மழை பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் உள் ளனர். ஊட்டி கூடப்பம் வந்து கால் வாய் 3 கிலோமீட்டர் தூரம் தூர்வாரப் பட்டுள்ளது. இதேபோல் மீட்பு பணி களுக்காக 68 ஜெனரேட்டர்கள், 18  பொக்லைன் வாகனங்கள், 124 மரம்  அறுக்கும் எந்திரங்கள், 16 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில்  உள்ளன என்றார். இந்த ஆலோசனை  கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செய லாளர் பிரபாகர், மாற்றுத்திறனாளி கள் நலத்துறை செயலாளர் ஆனந்த குமார், ஆட்சியர் அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர் ஷினி உள்ளிட்ட துறை சார்ந்த அலு வலர்கள் பங்கேற்றனர்.