சேலம், நவ.22- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய அமைப்புகளின் பணியிடங் களை தனியாருக்கு வழங்கிடும் அர சாணை 152-ஐ திரும்பப்பெற வலியு றுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி ஆகிய அமைப்புகளில் பணி களை தனியாருக்கு வழங்கிடும் வகை யில் தமிழக அரசு அரசாணை 152-ஐ நிறைவேற்றி உள்ளது. சமூக நீதிக்கு வேட்டுவைக்கும், தொழிலாளர்க ளுக்கு விரோதமான இந்த ஆணையை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் நடை பெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளாட்சி நிர்வாகத்தை தனியா ருக்கு தாரை வார்க்கும் அரசாணை 152-ஐ தமிழக அரசு திரும்ப பெற வலி யுறுத்தி சிஐடியு சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன் தலைமை தாங்கினார். இதில், சிஐ டியு மாவட்ட செயலாளர் இ.கோவிந் தன், தலைவர் டி.உதயகுமார், பொரு ளாளர் வி.இ.இளங்கோ உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றி னர். இதில், சங்கத்தின் துணை செயலா ளர் சி.கருப்பண்ணன் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.
நாமக்கல்
இதேபோன்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வீ.கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட உதவி செயலாளர் சு.சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் சி.அங்கம்மாள் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் பி.ஜீவா, மாவட்ட இணைச் செயலாளர் ஹானன்ட் ராஜ், கட்டுமான சங்க மாவட்ட தலை வர் சண்முகம், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் வி.ஜெயராமன், பொருளா ளர் சி.மணி, துணை செயலாளர் ஏ. மகேந்திரன், ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலை வர் குட்டியப்பன், பொருளாளர் வெங் கட்ராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்க தலைவர் எஸ்.சுப்ரமணி யன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம், சங்க செயலாளர் எஸ்.மாணிக்கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனிசாமி, சி.முருகேசன் உள் ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தைத்தொடர்ந்து அரசானை 152ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு சிஐடியு திருப்பூர் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச் சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்க உரை யாற்றினர். திருப்பூர் மாவட்ட அரசு ஊழி யர் சங்கம் மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியம் வாழ்த்தி பேசினார். இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழக அர சிற்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் தலைவர் ராஜா கனி தலைமை தாங்கினார். இதில், சங்கத் தின் தலைவர் சி.பத்மநாபன், பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், சிஐடியு மாவட்ட தலைவர் கே.மனோகரன், பொரு ளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஏ.எம்.ரபீக், சி. துரைசாமி, ஆர்.ராஜன், ராமகிருஷ் ணன், சரவணன், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுமதி உள்ளிட் டோர் பங்கேற்று உரையாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்று அர சானை 152ஐ திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.