கோபி, ஜன.7- கோபி அரசு மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் அமைந்துள்ள நடைபாதையின் நடுவே, மின்மாற்றி அமைந் துள்ளதால், பாதசாரிகள் மற்றும் நோயாளிகள் அவதிய டைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்து வமனை அருகே சாலை ஓரத்தில் பாதசாரிகள் நடைபாதை அமைந்துள்ளது. அந்த நடைபாதை வழியாக அம்மா உண வகம், அரசு மருத்துவமனை, வங்கி ஆகியவற்றிக்கு பொது மக்கள், நோயாளிகள் என பலர் காலை, மாலை நேரங் களில் அதிகளவில் சென்று வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் நடந்து செல்லும் அந்த நடைபாதையின் நடுவே மின்மாற்றி அமைந்துள்ளது. இதனால், ஒரு சில பொதுமக்கள் நடைபாதையை பயன் படுத்தாமல், சாலையை பயன்படுத்துவதால், போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், புறநோயாளிகள் சிலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, நடைபாதையில் அமைந்துள்ள மின்மாற்றியை, வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.