districts

img

அமாரவதி அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்

உடுமலை, நவ.6- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிளில் மழை பெய்து வரு வதால், அமராவதி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து  வருகிறது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குபடி பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு என சுமார் 54,634 ஏக்கர் விவசாய நிலங்களும், ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.  மேலும்,  அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி இருந்த நிலை யில், தற்பொழுது 85.11 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1493 கனஅடி நீர் வருகிறது. மேலும் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவாதால் அணையில் இருந்து உபரிநீர்  ஆற்றில் திறந்துவிடப்படும் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.