districts

வாகனத்தின் அசல் பதிவுச் சான்றிதழை தர மறுப்பு

நாமக்கல், பிப்.12- இருசக்கர வாகனத்தின் அசல்  வாகனப் பதிவு சான்றிதழை வழங் காத விற்பனையாளர், பாதிக்கப் பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.50  ஆயிரம் இழப்பீடு வழங்க வேண் டும் என நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தைச் சேர்ந்த சந்திரன் என்வ ரின் மனைவி மாதேஸ்வரி (53).  இவர் இருசக்கர வாகனம் வாங்கு வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஈரோட்டிலுள்ள லோட்டஸ் ஏஜென்சி என்ற இரு சக்கர விற்பனை நிலையத்தை அணுகியுள்ளார். ரூ.63,509 மதிப் புள்ள வாகனத்தை தேர்வு செய்து,  ரூ.10 ஆயிரத்தை விற்பனையாளரி டம் முன்பணமாக செலுத்தியுள் ளார். ஈரோட்டிலுள்ள எச்டிஎப்சி வங்கி மூலமாக வாகனத்தின் மீதம்  தொகைக்கு இருசக்கர விற்பனை யாளர் கடன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தை பதிவு  செய்த பின்னர் அசல் பதிவுச் சான்றி தழை மாதேஸ்வரி கேட்டபோது, கடனுக்காக அசல் பதிவுச் சான்றி தழை வங்கியில் கொடுத்து விடு வோம் என்று இருசக்கர வாகன விற் பனையாளர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அசல் கடனையும், வட்டியையும் செலுத்திய பின்னர்,  வங்கிக்கு சென்று அசல் வாகன  பதிவுச் சான்றிதழை கேட்டபோது,  

தங்களிடம் சான்றிதழ் இல்லை  என்று வங்கி தரப்பில் மாதேஸ்வ ரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் வழக்கறிஞர் மூலம் சட்ட அறிவிப்பு அனுப்பி, பதிவுச் சான்றிதழை தருமாறு வங்கியில் கேட்டபோதும், அசல் சான்றிதழ் தங்களிடம் இல்லை எனக்கூறி வங்கி நிர்வாகம் கூறியதோடு, அசல் பதிவுச் சான்றிதழில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கடன் குறிப்பு நீக்குவதற்கான படிவத்தை மட்டும்  வழங்கியுள்ளது. இதனால் வாகன விற்பனையாளரை அணுகி அசல்  பதிவுச் சான்றிதழை கேட்டபோது தாங்கள் வங்கியில் கொடுத்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள் ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி கடந்தாண்டு மே மாதம், நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் வங்கியின் மீதும், வாகன விற்பனையாளர் மீதும் வழக்கு தாக்கல் செய்தார்.  இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற  நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர்கள்  ஆர்.ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோர் புதனன்று தீர்ப்பு வழங் கினர். அதில், அசல் வாகன பதிவுச்  சான்றிதழ் யாரிடம் வழங்கப்பட் டது என்பதற்கான அறிக்கையை விசாரணையில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் சமர்ப்பித்துள் ளார்.

இதில் அசல் பதிவுச் சான்றி தழை பெற்றுக் கொண்டதாக வாகன விற்பனையாளரின் தரப் பில் கையொப்பம் செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் அசல் பதிவுச் சான்றிதழை வைத்துக்கொண்டு, அதனை தர மறுக்கும் வாகன  விற்பனையாளரின் செயல் நேர்மை யற்ற வர்த்தக நடைமுறை. எனவே,  நான்கு வார காலத்துக்குள் அசல் வாகன பதிவுச் சான்றிதழை வழக்கு  தாக்கல் செய்துள்ள மாதேஸ் வரிக்கு, இருசக்கர வாகன விற் பனையாளர் வழங்க வேண்டும். மாதேஸ்வரிக்கு ஏற்பட்ட மன  உலைச்சல் மற்றும் சிரமங்க ளுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம்  வழங்க வேண்டும், என தெரிவிக்கப் பட்டது. மேலும், எவ்வித தவறும்  இல்லாததால் வங்கியின் மீதான  புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது.