districts

img

அக்.17ல் அரசு ஊழியர் சங்க பிரதிநிதித்துவ பேரவை

சேலம், செப்.27- சேலத்தில் அக்.17 ஆம் தேதியன்று நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவைக்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை அக்டோபர் 17 ஆம் தேதியன்று சேலம் மாநகரில் நடைபெறவுள்ளது.  முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும் முக்கிய முடிவுகள் எடுத்திடும் பேரவையாக இருப்பதால், அதனை சிறப்பாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.  சேலம் மாவட்டத் தலைவர் ந.திருவேரங்கன் தலைமையில் நடைபெற்ற வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டத்தில் மாவட்ட செயலார் பு.சுரேஷ் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம், மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநில பொருளாளர் மு.பாஸ்கரன், துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரவேற்புகுழு அமைப்பு

முன்னதாக, வரவேற்புக்குழு தலைவராக சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர்  சுகுமார், சிறப்புமிகு தலைவராக வருவாய் துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் வே.அர்த்தனாரி, கௌரவ ஆலோசகராக ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.சுப்ரமணியம், வரவேற்புகுழு செயலாளராக மாவட்ட செயலாளர் பு.சுரேஷ், நதிக்குழு உறுப்பினர்களாக சேலம் மாவட்ட நிர்வாகிகள் செல்வம், ராணி, சண்முகம் உள்ளடங்கிய வரவேற்புக்குழு தேர்வு செய்யப்பட்டது.