உதகை, நவ.28- பந்தலூர், தேவாலா பகுதியில் நோய்த்தொற்று பரவியபோது, சுகாதாரத்துறையினர் அலட்சியப் படுத்திய நிலையில், இந்திய ஜனநயாக வாலிபர் சங்கத்தினர் துரிதமாக செயல்பட்டு நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரச்செய்தனர். நீலகிரி மாவட்டம் தேவாலா கிராம பகுதியில் போக்கர் காலனி என்னும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு, இருமல் போன்றவை ஏற்பட்டிருந்தன. இதனையறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஏரியா செயலாளர் இராசி இரவிக்குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த தகவலை 18 ஆம் தேதி தெரிவித்தார். ஆனால், இதனை அலட்சியப் படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மேம்போக் காக ஆய்வை மேற்கொண்டு, நோய்த்தொற்று பரவி வருகிறது என்பது தவறான தகவல் என ஊட கத்திற்கு பேட்டி கொடுத்தனர். உரிய ஆய்வை மேற்கொள்ளாததன் விளைவாக நோய் தொற்று பல பகுதியிலும் வேகமாக பரவியது. இதனைய டுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், உடனடியாக சம்பந்தப்பட்ட கிராமத்திற்குள் சென்று ஒவ்வொரு வீடாக ஆய்வு மேற்கொண்ட னர். இதில், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப் புக்குள்ளானதை உறுதி செய்தனர். இதன்பின், சுகாதாரத்துறை இப்பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாக்க வேண் டும் என்று, பல இடங்களில் பதாகைகள் வைத்த னர். இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் தலைமையில் பத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் அப்பகுதியை தங்களின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து ஆய்வு செய்தனர். இதில், 12 பேருக்கும் அதிகமான குழந்தைகள் மஞ்சள் காமாலை நோய்தொற்றால் பாதித்திருப் பதை உறுதி செய்தனர். பின்னர் உடனடியாக போக் கர் காலனியில் மருத்துவ முகாம்களை அமைத்து, மருத்துவ உதவிகளை மேற்கொண்டனர். மேலும், எதனால் இந்த மஞ்சள் காமாலை குழந்தைகளுக்கு பரவுகின்றன என்கின்ற அடிப் படையில் சம்பந்தப்பட்ட கிராமத்திலிருந்து தண் ணீர் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். தற்போது, நோய்தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக மாவட்ட மருத்துவ அலுவ லர், வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் தெரி வித்தனர். வாலிபர் சங்கத்தின் துரித செயல் பாட்டால், நோய்தொற்று கட்டுக்குள் வந்துள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள் வாலிபர் சங்கத்தின் நிர் வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.