தருமபுரி, ஜன.23- தருமபுரியில் பிஎஸ்என்எல் சேவைகளை விளக்கி நடை பெற்ற பேரணியில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர். பிஎஸ்என்எல் அதிவேக பைபர் நெட்வொர்க் திட்டம் குறித் தும், அதன் சேவைகள் குறித்தும் மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பி ருந்து பேரணியை பொதுமேலாளர் சி.பி.சுபா துவக்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் துணை பொதுமேலாளர் எம்.பிரபு துரை, கூடுதல் பொதுமேலாளர்கள் சரவணமணி, அரிதா, அசாரே, மஞ்சுநாத், சேகர், லீனா, உட்கோட்ட பொறியாளர் கிஷோர்குமார், ரேவதி மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பிஎஸ்என்எல் திட்டங்கள் குறித்து பேசினர். இதையடுத்து திட் டங்கள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங் கப்பட்டன. முன்னதாக, தருமபுரி தொலைபேசி நிலையத்தி லிருந்து துவங்கிய பேரணி ராஜகோபால் பூங்கா, நேதாஜி நெடுஞ்சாலை வழியாக பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலு வலகத்தில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான ஊழியர் கள் கலந்து கொண்டனர்.