districts

img

சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

சேலம், அக்.17- சேலத்தில் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், மாணவிகள் அவதிக்குள்ளா கினர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, செவ்வாய்பேட்டை பகுதி யில் கால்வாய் பணி முழுமையாக நடைபெறாததால் மழை நீர் சாலையில் ஆறுபோல் செல்கிறது. குறிப்பாக செவ்வாய் பேட்டை - நெத்திமேடு இடையில் அமைந்துள்ள ஜெய ராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நெத்திமேடு ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி மாணவிகள்  உட்பட வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண விகள் வலியுறுத்தியுள்ளனர்.