தருமபுரி, ஜன.24- ஒப்பந்தம் கோரப்படும் நிலை யில், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் மேம்பாலம் கட்டும் பணிகள் உள்ளதென தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, தருமபுரி மக்களின் தொடர் கோரிக்கையாக இருந்த வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகு தியில் மேம்பாலம் அமைக்க வேண் டும் என்ற கோரிக்கையின் அடிப்ப டையில் அண்மையில் ஆய்வு மேற் கொண்டேன். அதன்பிறகு மேம்பா லம் அமைக்க பலமுறை ரயில்வே வாரியத்திற்கு கடிதங்கள் வாயிலாக தெரிவித்ததன் அடிப்படையில், பார திபுரம் 66 அடி சாலை வழியாக செயல் படுத்த உத்தேசிக்கப்பட்டு, 500 மீட்டர் தொலைவில் ரயில் மேம்பாலம் அமைத்து கட்டுமானத்திற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது. மேம் பாலம் அமைக்க ரயில்வே மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை யால் அங்கீகரிக்கப்பட்டு அவற்றின் செலவை ரயில்வே மற்றும் மாநில அரசு பகிர்வு அடிப்படையில் செயல் படுத்த முடிவு செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நவ.19 ஆம் தேதியன்று நேரடியாக நான் ஆய்வு செய்தபோது, ரயில்வே கேட் இருக்கும் இடத்தில் பாதசாரி சுரங்கப்பாதைக்கு பதிலாக இருசக்கர வாகனம், குறைந்த எடை கொண்டு செல்லும் வாகனம் செல் லும் வகையில் அமைக்க அறிவுறுத் தப்பட்டது. ரயில்வே அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒப்புத லுக்காக கடிதம் அனுப்பப்பட்டது. கடி தத்திற்கு ஆட்சியர் விரைந்து ஒப்பு தல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை வரைபடத்தின்படி, நெடுஞ்சாலைத் துறை தமிழக அரசுக்கு நிர்வாக அனு மதி கோரி கோப்புகள் அனுப்பப் பட்டு, ஜன.5 ஆம் தேதியன்று ரயில்வே நிர்வாகம், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு நிர்வாக அனுமதி கோரி கடிதம் அனுப் பட்டது. விரைவில் நிர்வாக அனுமதி கிடைக்கும் என கூடுதல் தலைமைச் செயலாளர் நம்பிக்கை அளித்துள் ளார். மதிப்பீடுகளைப் பெற்ற பிறகு “லைட் வெயிட் ஓவர் பிரிட்ஜ்” உள் ளிட்ட முழு ரயில்வே மேம்பாலத் திற்கு ரயில்வே நிர்வாகம் மதிப் பீட்டு அறிக்கை தயாரித்து அனுமதி பெறப்பட்ட பிறகு இப்பகுதியில் மேம் பாலம் அமைக்க ஒப்பந்தம் கோரப் படும் நிலையில் உள்ளதென தெரி விக்கப்பட்டது.