districts

img

கோவையில் ஏப்.12 ஆம் தேதி நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் ராகுல் காந்தி, ஸ்டாலின் பங்கேற்பு

கோவை, ஏப்.5- கோவையில் வருகிற 12 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில், சுமார் 1.5 லட் சம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள் ளார். இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கண பதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட் பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க, வருகின்ற 12 ஆம்  தேதி, தமிழக முதல்வரும், திமுக தலை வருமான மு.க.ஸ்டாலின், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன் னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகி யோர் வருகை தர உள்ளனர். இதற் காக எல்&டி புறவழிச்சாலை, செட்டி பாளையம் அருகே பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற் கான பணிகள் நடைபெற்று வருகின் றது. இந்த பணிகளை அமைச்சர்  சு.முத்துச்சாமி ஆய்வு மேற்கொண் டார். தொடர்ந்து, காவல்துறை அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி னார்.  இதைத்தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதால், இந்த பிரச்சாரக் கூட்டத் திற்கு ஏறத்தாழ 1.50 லட்சம் பேருக்கு  மேல் வர உள்ளனர். எனவே, மிகுந்த முன்னேற்பாடுகளோடு நாங்கள் நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்து  வருகிறோம். வாகனம் நிறுத்துவதற் கான இடம், குடிநீர், கழிப்பிடம் உள் ளிட்ட அனைத்து அடிப்படை வசதி களுடன் கூடிய ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றது. வரும் பொதுமக்க ளுக்கு எந்தவிதமான சிறு பிரச்ச னைகளும் இல்லாதவாறு செல் லக்கூடிய வகையில் ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக தெரி வித்தார். இச்சந்திப்பின் போது, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், தெற்கு மாவட்டச் செய லாளர் தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணைச்செயலாளர் வி.ஜி.கோகுல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.