திருப்பூர், மே 29- திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி அருகே சாலப்பாளையம் கிரா மத்தில், வெறிநாய்கள் கடித்து பட்டியில் அடைத்து வைக்கப்பட்டி ருந்த 10 செம்மறி ஆடுகள் உயிரிழந் தன. ஊத்துக்குளி, சாலப்பா ளைத்தை சேர்ந்த விவசாயி எஸ்.கே. கொளந்தசாமி. இவரது தோட்டத் தில் ஆட்டுப்பட்டி அமைத்து செம் மறி ஆடுகள் வளர்த்து வந்தார். சனிக்கிழமை இரவு இந்த ஆட்டு பட்டியில் சுமார் 15 செம்மறி ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெறிநாய்கள் இந்த ஆட்டுப் பட்டிக்கு உள் நுழைந்து அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் 10 செம்மறியாடுகள் உயிரிழந்து விட்டன. ஒரு சில ஆடுகள் காயம டைந்த நிலையில் உயிருடன் இருந்தன. இந்த சம்பவத்தை அறிந்த கொளந்தசாமி உயிருடன் இருந்த ஆடுகளை மீட்டு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்கு கொண்டு சென்றார். வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு ரூபாய் 75 ஆயிரம் வரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வட்டாரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரு கின்றன. கிராமப்புறங்களில் வெறிநாய்கள் இல்லை. நகர்ப் புறங்களில் இறைச்சி மற்றும் கோழி கழிவுகள் குப்பையில் கொட்டப்படு வதை தின்று வாழும் தெருநாய் கள் அருகாமையில் இருக்கும் கிரா மங்களில் புகுந்து இதுபோல் ஆடு களை கடித்துக் கொல்கின்றன.இதைநானே நேரில் பார்த்திருக்கி றேன் என்றும் கொளந்தசாமி கூறினார். இழப்பீடு வழங்குக ஊத்துக்குளி வட்டார கிராமப் புற பகுதிகளில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழக் கும் சம்பவங்கள் தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இதனால் விவசா யிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு, மன உளைச்சல் ஏற்படுகி றது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்நடைகளை இழந்த விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.