districts

img

வினாடி - விடை போட்டி: மாணவி முதலிடம்

திருப்பூர், ஜன.13- மங்கலம் அமிர்த வித்தியாலயம் பள்ளியில் நடைபெற்ற  வினாடி - விடை போட்டியில் திருப்பூரை சேர்ந்த நீலா மேகா  வெற்றி பெற்றுள்ளார். திருப்பூர், மங்கலம், வேட்டுவபாளையத்தில் உள்ள  அமிர்த வித்தியாலயம் பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்று  தேர்வில், 692 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் அதிக மதிபெண்கள் பெற்ற, 16 பேர், ஏ,பி,சி,டி,யி,எப், ஜி,எச் என  எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கு  அனைத்து துறைகலிருந்தும் மூன்று சுற்றுகள் வீதம், பொது  அறிவு கேள்விகள் கேட்கப்பட்டது.  இறுதியில் எச், அணியை சேர்ந்த வாலிபர் சங்க முன்னால்  மாவட்ட தலைவர் ஞானசேகரன் மகளும், தெற்கு மாநகர  குழு உறுப்பினருமான நீலா மேகா மற்றும் இந்துமதி ஆகி யோர், 20 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றனர். மேலும்  இவர்கள் இருவரும் மாநில அளவில் நடைபெறும் சுற்றுக்குத்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்சியில், பள்ளி முதல்வர் வித்யாசாகர், பள்ளி  ஒருங்கிணைப்பாளர் சிகப்பி ஆகியோர் வெற்றி பெற்ற  மாணவ மாணவியர்கள் மற்றும் பங்குபெற்ற மாணவ,  மாணவியருக்குச் சான்றிதழ் வழங்கினர். பள்ளி ஒருங்கி ணைப்பாளர் மீனாகுமாரி, காளீஸ்வரி ஆகியோர் போட் டியை ஒருங்கிணைந்து நடத்தினர்.