districts

img

தனியார்மயப்படுத்தும் முயற்சியை கைவிடுக

கோவை, பிப்.28– பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயப்படுத் தும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பொது இன்குரன்ஸ் ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் நலச்சங்கங்களைச் சேர்ந்த 18 அமைப்புகளின் கூட்டு நடவ டிக்கைக் குழுவின் சார்பில் கோவை யில் திங்களன்று தர்ணா போராட் ்டம் நடைபெற்றது. கோவை டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலு வலகம் முன்பாக நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு கூட்டமைப்பின் நிர்வாகி தங்கவேல் தலைமை வகித் தார். இப்போராட்டத்தை ஏஐடியுசி-யின் ஆறுமுகம், இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனத்தின் நிர்வாகி  ஜெய பால் உள்ளிட்டோர் வாழ்த்தி உரை யாற்றினர். முன்னதாக, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மய முயற்சியைக் கைவிட வேண்டும். நிலுவையில் உள்ள ஊதிய உயர் வினை வழங்கிடவும், புதிய ஓய்வூ தியத் திட்டத்தைக் கைவிட வேண் டும். 1995 ஆம் ஆண்டு ஓய்வூதியத்  திட்டத்தில் அனைத்து ஊழியர்களை யும் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.