அவிநாசி, பிப். 22 - பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த குடியிருப்புப் பகுதிக்கு மேலே செல்லும் மின் கம்பியை மாற்றக்கோரி திருமுருகன்பூண்டி உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன் பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர். பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபா ளையம், அண்ணாநகர் பகுதியில் குடியிருப் புக்கு மேலே செல்லும் மின் கம்பியை மாற்ற கோரியும், மின் கம்பத்தை அகற்றி தரக் கோரி கோரியும் தொடர்ந்து பல வருடங்க ளாக ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியர், மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் என பல இடங்களில் அப்பகுதியைச் சேர்ந்தோர் மனு அளித்துள்ளனர். இப்பிரச்ச னைக்குத் தீர்வு காணாததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருமுருகன்பூண்டி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முற் பட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூறுகையில், நிரந்தரமாக தீர்வு எட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும். மண்டபத்திலிருந்து வெளியே விட்டாலும் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத் தில் ஈடுபடுவோம், என தெரிவித்தனர்.இதையடுத்து அதிகாரிகள் இப்பிரச்ச னையை முடிவுக்கு கொண்டு வர கால அவகா சம் கேட்டுள்ளனர்.