districts

பார்த்தீனியம் செடிகளால் பொதுமக்களுக்கு இடையூறு

உடுமலை ஜூன் 29-  பார்த்தீனியம் என்னும் களைச்செடி தற் போது விளைநிலங்களில் மட்டுமல்லாமல் வீதிகளிலும் பரவி விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையூறு விளைவிக்கிறது.அது வளரும் இடத்தில் வேறு செடிகளை வளர விடாமல் ஆக்கிரமித்து வளரும் குணம்  கொண்ட விஷத்தன்மை வாய்ந்தது செடிகள்  என்பதால் மனிதர்களுக்கும் கால்நடை களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளதால் வீரியமிக்க களைக் கொல்லிகளைப் பயன்படுத்த வேண் டிய நிலை உள்ளது. அவ்வாறு பயன்படுத் தும் போது களைக்கொல்லிகளின் வீரியத் தால் வரப் போரங்களில் மண் அரிப்பைக் கட் டுப்படுத்தும் அறுகம்புல் மற்றும் நன்மை தரும் பூச்சியினங்கள் வளர்வதற்கு உதவும்  சிறு தாவரங்கள் உள்ளிட்டனவும் முற்றிலு மாக அழிந்து விடுகிறது. இதனால் பிரதான பயிர்கள் பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட பல் வேறு பாதிப்புகளைச் சந்திக்கிறது.  இந்நிலையில் இயற்கை முறையில் பார்த் தீனியத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அனுபவ விவசாயிகள் வழிகாட்டியுள்ளனர். இதுகுறித்து  விவசாயிகள் கூறியதாவது:    1950-60 ஆம் ஆண்டுகளில் அமெரிக் காவிலிருந்து இந்தியாவிற்குக் கோதுமை மற்றும் உணவு தானியங்கள் இறக்குமதி செய்தபோது பார்த்தீனிய செடியின் விதை களும் கலந்து வந்து விட்டதாகக் கூறப் படுகிறது.இவற்றின் இலைகள் கேரட் செடிக ளின் இலைகளைப் போலக் காணப்படும்.அத னால் இதை கேரட் களை என்றும் கூறுவார் கள்.பார்த்தீனிய விதைகளில் காணப்படும் நச்சுப் பொருட்களினால் மனிதர்களுக்குத் தோல் வியாதி, கண் எரிச்சல், மூச்சுத்திண றல், ஆஸ்துமா உள்ளிட்ட அலர்ஜி நோய்கள்  ஏற்படுகின்றன. மேலும் கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே பார்த்தீனியத் தின் இளம் செடிகளைப் பூப்பதற்கு முன் கையுறை அணிந்து பிடுங்கி ஆழமாகக் குழி  தோண்டி மாட்டுச் சாணம் கோமியம் சேர்த்துப்  புதைக்க வேண்டும். இது மக்கியதும் உரமா கப் பயன்படுத்தலாம்.மேலும் வளர்ந்த செடிக ளைப் பூக்கும் பருவத்திற்கு முன் ஒரு லிட்டர்  நீருக்கு 200 கிராம் சமையல் உப்பு மற்றும் ஒரு  மில்லி சோப்பு திரவத்தினைக் கலந்து தெளித் தும் கட்டுப்படுத்தலாம் என்று கூறினர்.