தாராபுரம், நவ. 8- தாராபுரம் பேருந்து நிலையம் முன்பு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்ப தால் வேகத்தடை அமைக்கபொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தின மும் பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாக னங்கள் தாராபுரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் தாராபுரம் பேருந்து நிலைய சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து வசதிக்காக இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு குனிபாளையம் பிரிவில் இருந்து பழைய ஹவு சிங் யூனிட் வரை தாராபுரம் பேருந்து நிலையம் வழியாக மேம் பாலம் கட்டப்பட்டது. பேருந்துகள் பேருந்துநிலையத்திற்குள் வந்து செல்ல சர்வீஸ் ரோடு போடப்பட்டது. இந்நிலையில் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு வெளியே வரும்போது சர்வீஸ் ரோடு வழியாக எதிர்திசையில் வரும் வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் வாகனங்கள் சேதம் அடைவதோடு வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர். இப்ப குதியில் இருபுறமும் வேகத்தடை அமைக்கவேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தாராபுரம் அரசு பேருந்து பேருந்து நிலைய நுழைவு வாயிலில் நுழைய முயன்றபோது சர்வீஸ் சாலையில் வந்த தனியார் பேருந்து மோதியது. இதில் அரசு பேருந்து முன்பக்க கண்ணாடி உடைந் தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபோன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருவதால் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற் கொண்டு பேருந்து நிலைய சாலையின் இருபக்கமும் வேகத் தடை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.