அகழிகளை ஆழமாக வெட்ட பொதுமக்கள் கோரிக்கை
அகழிகளை ஆழமாக வெட்ட பொதுமக்கள் கோரிக்கை ஈரோடு, மே 4- குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் அகழிகளை ஆழமாக வெட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்கு கள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி, பர்கூர் வனப்ப குதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த ஆண்டு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுதால் குளம், குட் டைகளும் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்கு கள் உணவு, தண்ணீரை தேடி காட்டு யானைகள் கூட்டமாக வும், தனியாகவும் அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சம்பவம் அவ்வப்போது நடைபெறுகின்றன. இவ்வாறு குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைக ளால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், வாழைம ரங்கள், தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்து வரு கின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ் டம் ஏற்பட்டுள்ளது. சில சமயம் யானைகளால் மனித உயிர்க ளுக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு விடுகிறது. அதேபோன்று மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவு, தண்ணீருக்காக யானைகள் அந்த பகுதியில் வரும் வாகனங் களை வழி மறைத்து வருகிறது. வாகனங்களை யானை துரத்தும் சம்பவமும் அதிகரித்து வருகின்றன. இதனால் இப்பி ரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்ப வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, வனப்பகுதி முழு வதும் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வனத்து றையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு அகழிகளை வெட்டி இருந்தனர். தற்போது அவை மண் நிறைந்து சமமாக ஆகிவிட்டது. இதனால் யானைகள் எளிதாக ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே வனத்துறையினர் மீண்டும் அகழிகளை ஆழமாக வெட்ட வேண்டும் என்றனர்.
தென்னை மரத்தில் வண்டு தாக்குதல்
ஈரோடு, மே 4- ஈரோடு மாவட்டம், இளை யம்பாளையம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார் பில் கூட்டத்தில் உதவி இயக் குநர் பிரியா பங்கேற்று, விவசாயிகளிடம் தென்னை மரத்திற்கு சேதம் விளைவிக் கும் சிவப்பு கூன்வண்டு, காண்டாமிருக வண்டு தாக்கு தலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது. இதேபோல், நல்லாம்பட்டி ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளியில் உலக பூமி தினத்தை முன் னிட்டு வேளாண் கல்லூரி மாணவிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்ப டும் பாதிப்பு குறித்து 4ஆம் வகுப்பு மற்றும் 5ஆம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
கோவை - மழையால் மக்கள் மகிழ்ச்சி
கோவை, மே 4- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனி யன்று பிற்பகல் நேரத்தில் கிட்டதட்ட ஒரு மணி நேரமாக குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்ந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக் கும் மேலாக கடும் வெயில் வாட்டி எடுத்து வரு கிறது. பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசி மக்க ளின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படைய வைத்துள்ளது. மேலும் பல மாதங்களாக மழையின்றி நீராதாரங்கள் வற்றி கடும் குடி நீர் தட்டுப்பாடும் மக்களை வாட்டி எடுத்தது. இந்நிலையில், சனியன்று பிற்பகல் முதல் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளில் குளிர் காற்றுடன் மிதமான மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட் டியுடன் மழை பெய்ததால் இப்பகுதி முழுவ தும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். ஒரு மணி நேரம் பெய்ந்த இந்த தொடர் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள போதிலும் சிறு முகை லிங்காபுரம் பகுதியில் மழைக்கு முன் னர் பலத்த சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. மேலும் அக்னி நட்சத்திர கால துவக்கத்தின் முதல் நாளிலேயே மழை பெய்ய துவங்கி யதால் சுட்டெரிக்கும் சூரியனை சமாளிக்க இயலாமல் தவித்த மக்கள் நிம்மதியடைந் துள்ளனர்.
முட்டை விலை 60 காசுகள் உயர்வு
நாமக்கல், மே 4- கடந்த 4 நாட்களில் நாமக்கல் மண்டலத் தில் முட்டை விலை 60 காசுகள் உயர்ந் துள்ளதால், கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் தினசரி 5 கோடிக் கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவ தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. அதன் அடிப்ப டையில் பண்ணையாளர்கள் முட்டையை விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலை யில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வரு கிறது. அதன்படி கடந்த ஏப்.30 ஆம் தேதி 420 காசுகளாக இருந்த முட்டை விலை மே 1 ஆம் தேதி 20 காசு உயர்ந்தது. பின்னர் மே 2 ஆம் தேதி 20 காசுகள் உயர்ந்த நிலையில், நாமக் கல்லில் நடைபெற்ற முட்டை ஒருங்கி ணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்ந்தது. இதனால் முட் டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசுகளாக உயர்ந்தது. இதில் முட்டை விலை கடந்த 3 நாட்களில் மட்டும் 60 காசுகள் உயர்ந் துள்ளது குறிப்பிடத்தக்கது. கடும் வெயி லால் முட்டை உற்பத்தி குறைந்ததால், இந்த விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லறை விற் பனை கடைகளில் ஒரு முட்டை 550 காசுக ளுக்கு விற்கப்படுகிறது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.124யாக இருந்த நிலையில், மேலும் 3 ரூபாய் அதிக ரித்து ஒரு கிலோ ரூ.127 ஆகவும், ரூபாயாக வும், முட்டைக்கோழி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ.90 ஆக வும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மாநகராட்சி கழிப்பிடம்
திருப்பூர், மே 4- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபு ரம் ஸ்டேட்பேங்க் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி கழிப்பிடம் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சுகாதாரமற்ற நிலை யில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கோரிக்கையை ஏற்று இங்கு மாநகராட்சி சார்பில் கழிப்பிடம் கட்டப்பட்டது. மேலும் இங்கு தான் இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் குழிநீர் தொட்டியும் உள்ளது. போதிய பாரமரிப்பு இல்லாததால், தற்போது கழிப்பிடம் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் கழிப் பிடத்திற்குள் செல்ல முடியாத வகையில் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். தண் ணீர் மோட்டார் போடக்கூட உள்ளே செல்ல முடியாத அளவில் குப்பைகள் கொட்டப்பட் டுள்ளது. மக்கள் பயன்படுத்தாத நிலையில், நாள் தோறும் இங்கு சமூக விரோதிகள் கூடி கஞ்சா உள்ளிட்ட போதை வாஸ்த்துகளை பயன்ப டுத்தும் இடமாக மாறியுள்ளது. இது போல் சமூக விரோத செயல் நடைபெறாமல் இருக்க உடைந்துள்ள கேட்டை சரி செய்ய வேண்டும். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். அப் போது தான் பழைய படி இந்த கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்த முடியும் என்றனர்.
மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம் நாமக்கல், மே 4- பள்ளிபாளையத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள காவிரி பகுதியை அடுத்த ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் விஜய குமார். இவரது மகள் சஞ்சீவ்விகாஷினி (19), ஈரோட்டிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த இரண்டு நாட் களுக்கு முன் இவருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இதைய டுத்து ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவரது தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதில் சஞ்சீவ்விகாஷினி மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இவ ரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. சஞ்சீவ் விகாஷினி உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாணவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினர்.
தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு
தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு சேலம், மே 4- பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண் டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர ஆய்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள் ளார். தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் சனியன்று சேலம், உடையாப்பட்டி, தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி பார்வையிட்டார். அப்போது அவர் பேசுகை யில், தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பேருந்து களை போக்குவரத்துத் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து இயக்கு வதற்குத் தகுதியான வாகனங்கள் என சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 335 தனியார் பள்ளிகளில் இயங்கிவரும் 2,123 பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் சனியன்று முதல் மே 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி, தீத்தடுப்பான், வேகக்கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா, அவசரகால வழி, பேருந்து படிக்கட்டுகளின் உயரம், காற்றோட்ட வசதி, கதவு, பிரேக்கின் தன்மை, பேருந்துகளில் இருக்கை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதி களும் 100 சதவிகிதம் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே சான்று அளிக்கப்படும். மோசமான நிலையில் உள்ள வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்படும். அதேபோன்று, மாவட்டம் முழு வதும் உள்ள பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு முழு உடற் பரிசோதனை முகாம் நடத்தப்படுவதுடன் வாகன ஓட்டு நர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கி, விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள் வது குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கும் உரிய அறிவுரை கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி வாகனங்களை இயக்குவ தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
உணவில் விஷம் கலந்து தாத்தா, தாயை கொலை செய்த மாணவர் கைது
நாமக்கல், மே 4- உணவில் விஷம் கலந்து தாத் தாவை கொலை செய்த அவரது பேரனும், கல்லூரி மாணவரை காவல் துறையினர் கைது செய்த னர். மேலும், அந்த உணவை சாப் பிட்ட தாய் அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், சிகிச்சை பலனளிக்கா மல் அவரும் பலியானார். நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத் திலிருந்து, செவ்வாயன்று இரவு கொசவம்பட்டி, வ.உ.சி நகரைச் சேர்ந்த பகவதி (20) என்ற கல் லூரி மாணவர் ஏழு துரித உணவு (சிக்கன் ரைஸ்) பொட்டலங்களை வாங்கிச் சென்றுள்ளார். அந்த உணவை நாமக்கல்லில் உள்ள தனது தாய் நதியா, தம்பி கெளசிக் (37), எருமப்பட்டி தேவராயபுரத் தில் உள்ள தாத்தா சண்முகம் (67), உறவினர்கள் 4 பேருக்கு பகவதி வழங்கியுள்ளார். அந்த உணவை உட்கொண்டதில் தாய் நதியா, தாத்தா சண்முகம் ஆகியோர் மட் டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். மாணவரின் தம்பி, பாட்டி, சித்தி, அவருடைய இரு குழந்தை கள் ஆகிய 5 பேருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகு றித்து தகவலறிந்ததும் மாவட்ட ஆட் சியர் ச.உமா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்து ‘சீல்’ வைத்தனர். ஆனால், உண வகத்தில் தவறு நிகழவில்லை; மாறாக அந்த உணவில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து தாய்க் கும், தாத்தாவுக்கும் வழங்கப் பட்டது என்பது தடயவியல் நிபு ணர்கள், மருத்துவக்குழுவினர் நடத்திய ஆய்விலும், போலீசாரின் விசாரணையிலும் தெரியவந்தது. இதற்கிடையே கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவரின் தாத்தா சண்முகம் வியா ழனன்று இரவு உயிரிழந்தார். தாய் நதியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வந்த நிலையில், வெள்ளி யன்று இரவு அவரும் மரணம டைந்தார். இதைத்தொடர்ந்து உணவக உரிமையாளர் ஜீவானந்தம், மாண வர் பகவதி ஆகியோரிடம் போலீ சார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். முதியவர் சண்முகம், தாய் நதியா ஆகியோர் உயிரிழந் ததையடுத்து, நாமக்கல் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, பகவதியை வெள்ளி யன்று காலை கைது செய்து நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கொளுத்தும் வெயில்: குடை விற்பனை அதிகரிப்பு
நாமக்கல், மே 4- வெயிலால் குடையின் பயன்பாடு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அன்றாட பணிக்காக மதிய நேரத்தில் வெளியே வரும் பொதுமக்கள் வெயில் தாக்கத் தின் காரணமாக அதிகளவு குடைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இத னால் கணிசமான அளவில் குடை பயன் பாடு மற்றும் விற்பனை அதிகரித்துள் ளது. இதுகுறித்து பள்ளிபாளையம் பகு தியில் சாலையில் பல்பொருள் அங்காடி வைத்திருக்கும் பிரகாஷ் என்பவர் கூறு கையில், முன்பெல்லாம் மழைக்காலத் தில்தான் அதிகளவு குடைகள் விற்ப னையாகும். தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையால் அன்றாட பணி களை மேற்கொள்ளும் பொதுமக் களில் பலரும் மதிய நேரத்தில் வெளியே வருவதால், வெயில் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தற்போது குடைகளை பயன்படுத்த தொடங்கியுள் ளனர். இதன் காரணமாக எங்கள் கடை யில் கணிசமான அளவில் குடை விற் பனை அதிகரித்துள்ளது. ஜூன் மாத துவக்கம் வரையிலும் வெயில் தாக்கம் இருக்கும் என கூறப்படுவதால் இன் னும் குடையின் பயன்பாடு அதிகரிக்க லாம் என நினைக்கிறேன், என்றார்.
சுகாதாரமற்ற கட்டணக் கழிப்பறை ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் புகார்
சுகாதாரமற்ற கட்டணக் கழிப்பறை ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் புகார் ஈரோடு, மே 4- ஈரோடு மாநகரட்சியில் கட்டணக் கழிப்பிடம் சுகாதார மற்று இருப்பதாக மாநகராட்சி ஆணையருக்கு, ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய புகார் கடிதத் தில், ஈரோடு கடை வீதிக்கு வேலை நிமித்தமாக வந்தேன். அப்போது மணிக்கூண்டு அருகில் இருக்கும் மாநகராட்சி கழிப்பிடத்திற்குச் சென்றேன். அங்கு மலம் கழிப்பதற்கும் ரூ.10, சிறுநீர் கழிப்பதற்கும் ரூ.10 என வசூலிப்பது தெரிய வந்தது. அதுகுறித்து கேட்டதற்கு ஈரோடு முழுக்க ரூ.10 தான் என்றும், விருப்பம் இருந்தால் ரூபாயைக் கொடுத்து விட்டு உள்ளே போகலாம், இல்லையெனில் வெளியே செல் எனக் கூறினர். ஒப்புக் கொண்டு ரூ.10 கொடுத்து உள்ளே சென்றேன். உள்ளே கழிவறை சரியாக சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசி யது. இதனால் அக்கழிவறைக்குச் செல்வோர்க்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து மாநகராட்சி கழிப்ப றைக்கு வரும் மக்களை காப்பாற்ற ஆவண செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.