districts

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா

தருமபுரி, பிப்.18- குடிநீர் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் தார மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், துட்டம்பட்டி ஊராட்சி, 9 ஆவது வார்டுக்குட்பட்ட மேல் காட்டு வளவு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அன்றாட தேவைகளுக்கு கூட குடிநீர் கிடைக்கா மல், பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் அருகில் உள்ள  கிராமங்களுக்கு சென்று குடிநீரை எடுத்து வருகின்ற னர். இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என  கூறப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் வழங்கக்கோரி மேல் காட்டு வளவு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  அவர்கள் குடிநீர் வழங்க கோரியும், அதற்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அலுவலகத்திற்கு பணிக்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கருணாநிதி, அனு ராதா ஆகியோரை தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் காவல் துறையினர் போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அப்போது, உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.