கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில், புதனன்று கோவை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வ லர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.