districts

img

மிதிவண்டிகள் வழங்கல்

சேலம், ஜன.10- கீரிப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பேரூராட்சி தலைவர் தேன்மொழி புத னன்று வழங்கினார். சேலம் மாவட்டம், கீரிப்பட்டி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 112 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில், விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் யோக லதா தலைமை வகித்தார். கீரிப்பட்டி பேரூராட்சி தலைவர் தேன்மொழி காங்கமுத்து கலந்து கொண்டு, மிதிவண்டி களை வழங்கினார். இதில் திமுக நிர்வாகி காங்கமுத்து, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னசாமி, பொருளா ளர் செல்வராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீதர், முரு கேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.