ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினருக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கு விழாவை சென்னையில் முதலமைச்சர் துவக்கி வைத்த நிலையில், கோவையில் 7000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெள்ளியன்று வழங்கினார்.