districts

img

4 மாத நிலுவை சம்பளத்தை வழங்கிடுக நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன.6- 4 மாத நிலுவை சம்பளத்தை வழங் கிடக்கோரி நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு  4 மாதமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சம்பளத்தை உயர்த்தி  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தடாகத்தில்  விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விதொச நிர்வாகி புஷ்பா தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் விதொச மாவட்ட செயலாளர் ஆர்.செல்வராஜ், சிஐடியு வடக்கு பொதுச் செயலாளர் ஆர்.கேசவமணி மற்றும்  ஆர்.பழனிசாமி, என்.வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று  கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.

;