உதகை, பிப்.14- பிளாஸ்டிக் நடைமுறை என்ற பெயரில் வியாபாரிகளை அச்சுறுத்தினால் மிகப் பெரிய போராட்டம் நடத்துவது என வணிகர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். நீலகிரி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் சங்க கட்ட டத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலை வர் முகமது பாரூக் தலைமை வகித்தார். பின்பு மாவட்ட தலைவர் முகம்மது பாரூக் நிருபர்களிடம் கூறுகையில், அரசு தடை செய்த 21 பிளாஸ்டிக் பொருட்களை மன தார வரவேற்கிறோம். மாவட்டத்தின் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு தடை செய்யப் பட்ட பொருட்களை வியாபாரிகள் பயன்ப டுத்த கூடாதென்று அறிவுறுத்தி வருகிறோம். மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவதால் அனைத்து தொழில் நிறுவ னங்கள் மற்றும் வியாபாரிகள் பயனடைந்து வருவார்கள். மேலும், ஒரு சில அதிகாரிகள் அரசு அனுமதித்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அதிகாரிகள் தேவை யில்லாமல் அபராதம் செலுத்தி வருகின்ற னர். இது வியாபாரிகள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வியாபாரிகளை குற்றவாளிகளைப் போன்று சித்தரிக்கின்றனர். அதிகாரிகளின் இந்த நட வடிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை தெரிவித்தும் எங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இது போன்ற செயல்களை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள் ளோம். மேலும் உதகை நகராட்சி கடை களை பொறுத்த வரை நகராட்சி நிர்வாகம் முதல் கூறிய உறுதி மொழியை போன்று கடை களை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்ட பணிகளை நிறை வடைந்த பிறகு அடுத்த கட்ட பணியை துவக்க வேண்டும். என்று கூறினார். இந்த கூட்டத்தில், வணிகர் சங்க மாவட்டச் செயலாளர் குணசேகரன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில துணை தலைவர் தோமஸ், மாநில இணைசெயலாளர் அப்துல் ரசாக், ராஜமுகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.