பள்ளிபாளையம், ஜூன் 10- குவாரிகளில் தேங்கும் தண்ணீர் திருடப்படுவதை கண்டித்து விவ சாயிகள் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே எலச்சி பாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம், நெய்க்காரம்பாளையம் இளையாம்பாளையம் பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட கல்குவாரி கள் சட்டவிரோதமாக இயங்கி வரு கின்றன. இக்குவாரிகளை தடை செய்ய வேண்டுமென கடந்த மூன்று வருடங்களாக பொது மக்கள் போராடி வந்தனர். இந்நிலையில், குவாரிகள் அனைத்தும் ஜனவரி மாதம் ஒப் பந்த காலம் முடிவடைந்தது. குவாரிகள் அரசின் கட்டுப்பாட் டிற்கு சென்றன. தற்போது, குவாரியில் மழை நீர்நீர் நிரம்பி உள்ளது. இந்த நீரினை குவாரியின் ஒப்பந்ததாரர்கள் எம்சாண்ட், பி சான்ட் தயாரிக்க மோட்டார் மூலம் உறிஞ்சப்படுவதுடன், விற்பனை யும் செய்யப்படுவதாக கூறப்படு கிறது. இது குறித்து, கடந்த மூன்று மாதத்திற்கு முன்னதாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறையினரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி விவசாயிகள், தனியார் தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங் கிணைப்பாளர் கே.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில், நீர் உறிஞ்சும் மோட்டார் களை பறிமுதல் செய்து நடவ டிக்கை எடுக்கும் வரை உண்ணா விரத போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, திருச்செங் கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, திருச்செங்கோடு (பொ) டிஎஸ்பி முத்துகிருஷ்ணன், வட்டாட்சியர் பச்சமுத்து, வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, துணை வட்டார வளர்ச்சி அலு வலர் ஆகியோர் நேரில் வந்து விவ சாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, குவாரி களில் இருந்த நீர் உறிஞ்சும் மோட்டார்களை அப்புறப்படுத்தப் பட்டன. இதனையேற்று உண்ணா விரதப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.