districts

img

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.22- குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டத் தலைவர் மணி தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் பழனிச்சாமி உள் ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். இதேபோன்று, அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பத்ம நாபன் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் எம்.பெருமாள், நல்லம்பள்ளி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணைத்தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கேசவன், பென்னாகரத்தில் வட்டத் தலைவர் விஜிய ரங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். தருமபுரி மாவட்டத்தில் பரவலாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டது.