districts

img

வருவாய் கோட்டாச்சியரை கண்டித்து போராட்டம்

கோவை, ஜன.4- கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு, வரு வாய் கோட்டாச்சியரை கண் டித்து காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்ட, தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தி னர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் சூலூர் வட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் வருவாய் கிராமத்தில் பட்டா நிலத்தில் உள்ள வண்டிபாதையை அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வண்டிப்பாதையை நிலவியல் வண்டிப் பாதையாக மாற்றம் செய்து தரக்கோரி தெற்கு வருவாய் கோட்டாச்சியரிடம் அப்ப குதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த பாதையை நிலவியல் வண்டிப்பாதையாக மாற்ற சாத்தியம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இத னையடுத்து, வியாழனன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், ஆட்சி யர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த் தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டபடவில்லை. இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய சுமார் 50க்கும் மேற்பட்ட  விவசாயிகள், தெற்கு வருவாய் கோட்டாச் சியரை கண்டித்து முழக்கங்களை எழுப்பி னர். மேலும், காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனு மதி இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால், போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நில வியது.