தருமபுரி, ஜன.1- விளை பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலக் கோடு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத் திற்குட்பட்ட கெசர்குழி வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது, பேவுஅள்ளி, கரகூர், சொக்கன் கொட்டாய், ஈச்சம்பள்ளம், காடையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெல், கரும்பு, அவரை, துவரை, போன்ற விளைப் பயிர்களை அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், காட்டு யானைகள் வனத்திற்குள் இருந்து வெளியேறி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சொக்கன் கொட்டாய் பகுதி விவசாயிகள் கூறுகையில், மாலை மங்கி இருள் சூழ தொடங்கியதும் வனத்திலிருந்து வெளியேறும் காட்டு யானைகள், விளைப் பயிர்களை சாப்பிட்டு விட்டு, மீண்டும் வனத்திற்குள் திரும்பி சென்று விடுகிறது. இதனால் வீடுகளில் நிம் மதியாக உறங்கக்கூட முடியவில்லை. எனவே, விளைப்பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.