districts

img

கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பேசினர்.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று காலை மேயர் கே.ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் துணைமேயர் ரா.வெற்றிசெல்வன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சியின் 100 சதவீதம் சொத்து வரி உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மாமன்ற கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற குழு தலைவர் வி.இராமமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.பூபதி கண்ணகி ஜோதிபாசு சுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாந்தி சந்திரன் ஆகியோர் சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து மாநகராட்சி உடனடியாக சொத்து வரியினை ரத்து செய்ய வேண்டும்  என வலியுறுத்தி பேசினர்.